Skip to main content

விடை 4308

 

 நேற்றைய வெடி:
 சிவனுடைய பாதி பாதி பாதி கர்வம் அடங்கியது (4)

 
அதற்கான விடை:   பார்வதி  = பாதி + ர்வ
ர்வ‌ = பாதி கர்வம்


இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

 

 நேற்றைய திரிவெடிக்கான நான் அளித்த  விடை பொருத்தமில்லை என்று குணா கருத்தளித்திருக்கிறார். அவருடைய ஆட்சேபணை சரியானதே என்பதை அதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம், இதோ:

திங்கள் மட்டுமே பூமியைச் சுற்றுகிறது என்பது பொருத்தமில்லாத விடை என நினைக்கிறேன்.ஏனெனில் செவ்வாய்,வியாழன் இரண்டும் (சூரியனிடமிருந்து கணக்கிடும்பொழுது) பூமியின் வெளி வட்டத்தில இருப்பதால் , அவை இரண்டும் சூரியனைச் சுற்றும்பொழுதே பூமியையும் சுற்றி விடுகின்றன. இன்னொரு விடையான சந்திரனைத் தவிர மற்ற நான்கு கோள்கள் மட்டுமே சூரியனைச் சுற்றுகின்றன என்ற கருத்திலும் நான் மாறுபடுகிறேன் ஏனெனில் சந்திரன் பூமியைச் சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றுகிறது. --- (குணா)
 

நான் என்னுடைய விடையை சற்றே வேறுவிதமாக விளக்கியிருக்க வேண்டும் (பல வாசகர்கள் சரியாக விளக்கியதைப் போன்று):
நாம் திங்கள் எனக்கூறும் வானவெளி வஸ்து அறிவியலில் பூமியின் துணைக்கோள் (moon/satellite) எனப்படுகிறது.

மற்ற நான்கு வான்வெளி வஸ்துகளை  அறிஞர்கள் (சூரியக் குடும்பத்தின்)  கோள்கள்  (planets of solar system) என்கிறார்கள். அதுதான் சரியான விளக்கம்/வித்தியாசம்.

பூமியைச் சுற்றி வருவது, சூரியனைச் சுற்றிவருவது என்பது அவற்றை வேறுபடுத்திக் காட்டாது என்ற நுட்பமான    காரணத்தை   சுட்டிக் காட்டிய அவருக்கு நன்றி.


Comments

GUNA said…
கூறிய நன்றியைக் கூச்சமும் தாழ்மையும்
ஏறிய நெஞ்சுடன் ஏற்கின்றேன் -- தேறிய
ஆசிரியர் தாங்கள், அரிச்சுவடி மாணவன்,நான்.
காசினியோர் ஏற்கும் கருத்து