Skip to main content

திரிவெடி 23 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

காலை, சோலை, வேலை, வாலை, பாலை

அதற்கான விடை: சோலை.
மற்ற நான்கு பெயர்ச்சொற்களும் வேறொரு பெயர்ச்சொல்லில் இரண்டாம் வேற்றுமை உருபான "ஐ" சேர்க்கப் பிறந்தவை.
கால்‍‍  > காலை,
வேல் > வேலை,
வால் > வாலை
பால் >  பாலை
 
எதற்கும் அஞ்சா வீரன் வேலை எறிந்து புலியைத் தாக்கி அதன் வாலை மிதித்துக் காலை ஒடுக்கிப்
 பாலைக் கறந்து குடித்தான்.

பாலை நிலத்தில் வாலைக் குமரிக்கு  அதிகாலையிலேயே ஏகப்பட்ட வேலை.
 
 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

GUNA said…

பாரதியார் பாடல்களில் வேலை என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்ற கருத்தைக் கண்டேன். எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பாரதியார் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஒன்றை மட்டும் இங்கு தருகிறேன்.

மிகவும் புகழ் பெற்ற இந்தப் பாடலின் எட்டாம் கண்ணியைப் பார்க்கவும்


#1

தொண்டு செய்யும் அடிமை உனக்கு
சுதந்திர நினைவோடா
பண்டு கண்டது உண்டோ அதற்குப்
பாத்திரம் ஆவாயோ

#2
ஜாதிச் சண்டை போச்சோ உங்கள்
சமயச் சண்டை போச்சோ
நீதி சொல்ல வந்தாய் கண் முன்
நிற்கொணாது போடா

#3
அச்சம் நீங்கினாயோ அடிமை
ஆண்மை தாங்கினாயோ
பிச்சை வாங்கிப் பிழைக்கும் ஆசை
பேணுதல் ஒழித்தாயோ

#4
கப்பல் ஏறுவாயோ அடிமை
கடலைத் தாண்டுவாயோ
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை
கொற்றத் தவிசும் உண்டோ

#5
ஒற்றுமை பயின்றாயோ அடிமை
உடம்பில் வலிமை உண்டோ
வெற்றுரை பேசாதே அடிமை
வீரியம் அறிவாயோ

#6
சேர்ந்து வாழுவீரோ உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ
சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ

#7
வெள்ளை நிறத்தைக் கண்டால் பதறி
வெருவலை ஒழித்தாயோ
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கு இல்லை மறந்திடடா

#8
நாடு காப்பதற்கே உனக்கு
ஞானம் சிறிதும் உண்டோ
வீடு காக்கப் போடா அடிமை
வேலை செய்யப் போடா

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...