Skip to main content

திரிவெடி 7 விடைகள்

 

 நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:  தேக்கு, நூக்கு,  ஆச்சா, கருங்காலி,   பூவரசு  


இந்த ஐந்து மரங்களில் ஆச்சா மரம் தண்ணீரில் மூழ்கும், மற்றவை மிதக்கும்.  சம கொள்ளளவு கொண்ட தண்ணீரை விட இதன் எடை 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.
நாதஸ்வரம் செய்ய இந்த மரத்தையே பயன்படுத்துகிறார்கள் என்பதும் உபரிச் செய்தி.  தச்சர்கள் மற்றபடி பல பொருட்களைச்
செய்ய இதைப் பயன்படுத்துதில்லை. தேக்கைவிட அதிக உறுதி கொண்ட இம்மரத்தில் வேலை செய்யும் போது உளியே உடைந்து விட வாய்ப்பிருக்கிறது என்பதால். 

கும்பகோணத்திற்கும் மாயவரத்திற்கும் நடுவே அமைந்த நரசிங்கம்பேட்டையில்  பரம்பரையாகச் சில குடும்பத்தினர் செய்துவரும் நாதஸ்வரங்கள் பிரசித்தி பெற்றதாம்   என்பதும்,
அடுத்த வாரம் வெறும் சொல்விளையாட்டாக திரிவெடி அமையும் என்பதும் இன்னிரு உபரிச் செய்திகள்.


  இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

Comments

Vanathy said…
நல்ல தகவல்கள்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.