Skip to main content

திரிவிடை 6 விடைகள்!

 

நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்
மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், நரசிம்ம ராவ், இந்தர் குமார் குஜ்ரால், வாஜ்பேயி 

 
இன்று யார் சரியான விடையளித்தவர்கள் என்று முடிவு செய்வதில் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளேன். நான் ஒரு கருத்தை வைத்து அமைத்த புதிரைப் பல வித கோணங்களில் சிந்தித்து வாசகர்கள் வேறு விடைகளையும், அதே விடைக்கு வேறு விளக்கங்களும் அளித்துள்ளனர்.

அம்பிகா 3 விடைகளையும், அருள் 5 விடைகளையும் பொருத்தமான விளக்கங்களுடன் அளித்திருக்கின்றனர்!
இதில் முடிவு என்று சொல்வதற்கு பதிலாக நான் ரசித்த விடைகளை அதன் எதிர்பாராத கோணத்திற்காகக் குறிப்பிடுகிறேன்.

கொடுத்த பட்டியலில் தனித்து நிற்பவர் மொரார்ஜி தேசாய் என்று அம்பிகா குறிப்பிடக் காராணம்: அவர் மட்டும் 19ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதாம்!

அருள் தனது மூன்றாம் விடையில் இன்றைய பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதால் குஜ்ரால்தான் தனித்திருப்பவர் என்கிறார்.

ஆனாலும் இவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள் என்பதால் அரசியல் ரீதியில் உள்ள விடைதான் பொருத்தமாக இருக்கும் என்று கொள்ளலாம். அப்படிப்பார்க்கும் போது ராம்கி கிருஷ்ணன், அருளின் 5ஆம் விடை  கூறுவது சந்திரசேகர்: முதல் முறை மந்திரியாகும்போதே பிரதமர் ஆனவர் என்பது மிகவும் ஏற்றுக் கொள்ள வேண்டிய விடை.

நான் எண்ணியதில் வாஜ்பேயிதான் (அவர் பிரம்மச்சாரி என்பதாலல்ல, வானதி மன்னிக்கவும்) தனித்து நிற்கிறார். அவர் ஒருவரே காங்கிர‌ஸ் கட்சியில் எப்போதும் இருந்திராதவர். விடுதலைக்கு முன்பே ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இருந்தவர்.

நரசிம்மராவ் ஒருவரே காங்கிரஸ்காரராக  பிரதமராக பதவியேற்றவர், தென்னிந்தியர் என்பதெல்லாம் சரியான விடை என்றாலும் வலுவான விடைகளாகாது எனக்கருதுகிறேன்.  இ
ந்த ஆட்டம் எனக்கும் சுவாரசியமாகிவிட்டது. பலரும் பலவிதங்களில் யோசிப்பதைத் தெரிந்து கொள்வதை நான் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.


 விடையைக் காண இங்கே சொடுக்கவும்.

Comments

Sandhya said…
Very interesting to read all the different answers and as a composer what you had in mind.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்