Skip to main content

திரிவெடி 9 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:  திருக்கை, கயல், வாளை, வஞ்சிரம், கானாங்கெளுத்தி

இதில் திருக்கை,  வாளை, வஞ்சிரம், கானாங்கெளுத்தி இந்த நான்கும் கடல்மீன்கள். கயல் அல்லது கெண்டை ஆறு குளங்களில் வாழ்பவை (நன்னீர் மீன்கள்).  இலக்கியத்தில்  (மருத) நாட்டு வளத்தைச் சிறப்பாகக் கூற  வயல்களில் இருப்பதாகவும் கவிஞர்கள் சொல்வர். திருப்பாவையில் ஆண்டாள் "ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள..." என்கிறார்.

இன்று விடையளித்தவர்களில் கயல் என்பது மட்டுமே கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும் என்ற காரணத்தை மீனாக்ஷி என்ற கயல்விழி   குறிப்பிட்டுள்ளார்! அதையே மீ கண்ணன் கூறுகிறார் (மீன் கண்ண‌ரோ?)

  இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

Comments

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.