Skip to main content

கி. பாலசுப்ரமணியன் சரவெடிக்கான விடைகள்

சென்ற ஞாயிறன்று கி.பாலசுப்ரமணியன் உருவாக்கிய சரவெடியை வெளியிட்டிருந்தேன். அதற்கான விடைகள் இதோ:

1. இது மத்தியிலும் இருக்கும், மாநிலத்திலும் இருக்கும் அரசு
3. சிறந்தவர்கள் பெறுவது சுரமிழந்தால் சாதுவாகும் பரிசு
5. மரியாதைக்குரிய கடவுள் மைந்தருடன் நடிகனாகிறார் சிவாஜி
7. உயிர் தப்ப சுவாசிக்க இடையே ஒரு பிராணியைப் பற்றி கேள்வி எழுகிறது பசுவா
10. காவிரி எப்படியும் இங்கிருந்துதான் கிளம்புவாள் குடகு
11. உலகம் தெரியாதவர்கள் வாழச் சிறந்த இடம் கிணறு
1. கண்ணீர் விட குட வாயில் லட்சணந்தான் அழகு
2. பசுவா? சிறுத்தையா உள் மூச்சு விடு சுவாசி
3. பெண் பார்க்க காரம் பஜ்ஜி
4. பாரதியின் அடியார்க்கடியார் சுரதா (சுப்புரத்தினதாசன்)
6. இரண்டாம் கடுகம்? காரமானது மிளகு
7. கலப்பட கும்பல் ஆற்றைக் கடக்கை வைத்திருப்பது படகு
8.கிசுகிசுவா? திரும்பினால் நாகம்! வாசுகி
9. நல்லது திருக்குறள் சொல்லும் கெடுதி மறப்பது நன்று
இந்தவிடைகளைக் கண்டுபிடித்தவர்கள்:
ராஜா ரங்கராஜன்
மீனாக்ஷி கணபதி
முத்து சுப்ரமண்யம்
ஜோசப் அமிர்தராஜ்
ரவி சுந்தரம்
லக்ஷ்மி ஷங்கர்
மீனாட்சி
கேசவன்
எஸ். ஆர். பாலசுப்ரமணியன்
பாலசந்திரன்
அகிலாண்டேஸ்வரி ஸ்ரீதரன்
குணசேகரன்
பா. நடராஜன்
அம்பிகா

ஒரே தவறுடன் விடையளித்தவர்கள் (பெரும்பாலோர் பாரதியின் அடியார்க்கடியார் "சுப்பு" என்று எழுதியிருந்தனர்.)
டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன், கதிர்மதி, நாகராஜன் அப்பிச்சிகவுண்டர், வி என் கிருஷ்ணன், ஆர் நாராயணன், ராமராவ், மு க ராகவன், வானதி, ஸ்ரீகிருபா, பிரசாத் வேணுகோபால்

Comments

Muthu said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.