நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
வெயில், பனி, கயிறு, பத்திரிகை
நேற்றைய திரிவெடி இதுவரை நான் கையாண்டிராத புதிய உத்தியைக் கொண்டிருந்தது (நியூ யார்க் டைம்ஸ் புதிராளி வைனா லியூ கையாளும் உத்திதான்). கொடுக்கப்பட்ட எல்லா சொற்களின் முன்னே ஒரு குறிப்பிட்ட சொல்லை இடுவதுதான். இப்போது மஞ்சளை ஒட்ட
மஞ்சள் வெயில் (உமா ரமணன் நண்டு படத்திற்குப் பாடிய பாட்டின் தொடக்கம்), மஞ்சள் கயிறு (தாலி), மஞ்சள் பத்திரிகை (எம்கே தியாகராஜ பாகவதர் ஒரு கொலையாளியை ஏவிவிடக் காரணமான லக்ஷ்மிகாந்தன் நடத்திய பத்திரிகை வகை) என்று பொதுவாகப் புழக்கதிலிருக்கும் மொழியின் பாணியைக் காணலாம்.
ஆனால் மஞ்சள் பனி என்றும் ஏதும் புழக்கத்தில கிடையாது.
மிகவும் குறைவானவர்களே இப்புதிரை முயன்றிருக்க சரியான விடையளித்த ஜோஸப் அமிர்தராஜ், அம்பிகா இருவருக்கும் பாராட்டுகள். விடையளித்தோர் பட்டியலை இங்கே காணலாம்.
Comments
இல்லை என்ற கருத்து வியப்பளிக்கிறது.
கீழே உள்ள தகவல் வலைதளம் கொடுக்கும்
தகவல்
இணைப்பு முகவரியும் கொடுத்துள்ளேன்.
----மஞ்சள் பனி என்பது பல குளிர்கால நகைச்சுவைகளின்
தலைப்பு. பனி அதன் தூய வடிவில் வெண்மையாக
இருப்பதால், மஞ்சள் பனியானது விலங்குகளின்
சிறுநீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களைக் கொண்டதாகக்
கூறப்படுகிறது.
"மஞ்சள் பனியை உண்ணாதே" என்ற கிளாசிக்
ஃபிராங்க் ஜப்பா பாடலின் உட்பொருள் அதுதான்.
15 ஜன., 2020https://www.thoughtco.com/yellow-snow-dangers-3444589.
மஞ்சள் பனி என்பது, பனி வெண்மையாக இருப்பதிலிருந்து மாறி மஞ்சள் நிறமாக மாறும் பனியைக் குறிக்கும்.
பனி மஞ்சள் நிறமாக மாற பல காரணங்கள் இருக்கலாம்.
மஞ்சள் பனிக்கு காரணங்கள்: விலங்குகளின் சிறுநீர், மகரந்தம், காற்று மாசுபாடு, இலைகள் கசிந்து கூரையில் சேர்ந்திருப்பது,
மஞ்சள் பனி பற்றி பேசும் பல குளிர்கால நகைச்சுவைகள் உள்ளன.
மஞ்சள் பனியை சாப்பிடக்கூடாது.
பனிப்பொழிவு இருக்கும்போது, காற்றில் இருந்து சிறிய அளவு இரசாயன அசுத்தங்கள் பனியில் சேர்ந்துவிடும்.
மலை மற்றும் வனப்பகுதிகளில் வசந்த காலத்தில் பனி சிவப்பு, பச்சை, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறமாக இருக்கலாம்.
இல்லை என்ற கருத்து வியப்பளிக்கிறது. " படிப்பவர்களை வியப்படையச் செய்திருக்கிறேன் என்றால் ஏதோ ஒன்றை நான் சரியாகச் செய்திருக்கிறேன்.
கிடைத்த விடைகளைக் கூர்ந்து -படித்து
விடையில் திரியினை வைத்த இருவர்
விடைகளை ஏற்போம் வியந்து
பொருத்தமாகும் என்றே புரிந்தும் -கருத்தினில்
மென்மையைக் காட்டவே வார்த்தை வியப்பினை
அன்புடன் வைத்தேன் அறிந்து
சரியான தென்பார்நம் சான்றோர்-சரியாகத்
தப்பினைச் செய்தல் தகுமோ? தகுமென்றே
இப்புவியில் ஏற்போர் எவர்?