Skip to main content

விடை 4330

 

 நேற்றைய வெடி:   கடைசியாக அழகிய‌ முயல் பிரயாகையில் காணாமற்போனது (3)

பிரயாகையில் நடக்கும் கும்பமேளாவில் கும்பல் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அங்கே முயல் குட்டியைக் காணாமற்போக்கியவர்கள் தேட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
 சுஜாதாவின் கதையொன்றில்(1978/'79)  மேற்கோள் காட்டப்பட்ட புவியரசின் கவிதையில் கூறியது போல் ஆகிவிடும்
. ("தேடாதே, தேடினால் நீயும் காணாமற்போய்விடுவாய், வழிகள் மாற்றிவைக்கப்பட்டுள்ளன").

இதற்கான விடை:  

யமுனை
= ய + முனை
ய = 'அழகிய' என்ற சொல்லின் கடைசி எழுத்து
முனை = முயல் (முயற்சி திருவினையாக்கும்)

 பிரயாகையில் கங்கையில் சங்கமித்
து யமுனை தன் அடையாளத்தை இழந்தது.
விளக்கத்தையளித்த இரா.செகுவுக்குப் பாராட்டுகள். 


ஒரு பிழையைச் சுட்டிக்காட்டித் திருத்த உதவிய ராமகிருஷ்ண ஈஸ்வரனுக்கு நன்றி.

இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 


Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...