Skip to main content

திரிவெடி 42 விடை


 நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்

கெண்டை, மண்டை, செண்டை,  தண்டை,  சுண்டை

1. எல்லா சொற்களும் "டை" கொண்டு முடிகின்றன. அதை "டு" என்று மாற்றினாலும் பொருள் தருபவை இதோ:
மண்டை:  மண்டு
செண்டை: செண்டு,  
தண்டை: தண்டு,  
சுண்டை: சுண்டு

கெண்டை இதனுடன் சேராத சொல். பானுமதிக்கு பாராட்டுகள்

திருத்தம்:
குணா எடுத்துக் காட்டிய ஆதாரத்தின் படி "
கெண்டு" என்றும் ஒரு சொல் இருக்கிறது. அந்த சொல்லின் பொருளைக் கண்டுபிடிக்க அகராதியைத் தேடிப் போகிறேன்.



2. அல்லது "டி" என்று முடித்தாலும்பொருள் தரும் என்கிறார் அருள்.
கெண்டை: கெண்டி
மண்டை: மண்டி
தண்டை: தண்டி
சுண்டை: சுண்டி

இவ்வகையில் சேராத சொல், செண்டை

இதில் தண்டி என்றால் மிகுதி என்பதை இன்று தெரிந்துகொண்டேன். 

பாராட்டுகள்  அருள்.

3. இன்னொரு விடை "ண்டை" என்ற இரண்டு எழுத்துகளையும் நீக்கி  "டு" சேர்க்கவும் பொருள் கிடைக்கும் என்கிறது

கெண்டை: கெடு
மண்டை:  மடு
தண்டை: தடு,
சுண்டை: சுடு
 அதன்படி சேராத சொல் செண்டை. பாராட்டுகள் அம்பிகா.

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

GUNA said…
இல்லை தமிழில் இதுவென 'கெண்டு'பற்றிச்
சொல்லியது கண்டு திகைப்புற்றேன் - சொல்லதனை
ஏற்ற புலவர்கள் ஏராளம், ஏற்றிடுவீர்
மாற்றுக் கருத்தை மதித்து
-----------------------------------------------------------------------------
-வில்லி பாரதம்

செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான்
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட
கெண்டினான் முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான்
--------------------------------------------------------------------------------
-திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை

தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம்
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே
-----------------------------------------------------------------------------------------------------------
GUNA said…
மேலும் சில சான்றுகள்

 திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை

வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள்
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே

-----------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை

வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள்
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே
Vanchinathan said…
அப்படியா கெண்டு என்று ஒரு சொல் இருக்கிறதா? சான்றுகளை முழுமையாகக் காட்டியதற்கு நன்றி குணா.
தீர்ப்பை மாற்றியெழுத வேண்டியதுதான்.
GUNA said…
வழுவமைதி என்னும் விதியுண்டு  தானே
அழகுத் தமிழில், அதனால் - எழுதிய
தீர்ப்பினை மாற்றுதல் தேவை யிலாதது
யார்க்கும் பொருந்தும் இது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்