Skip to main content

திரிவெடி 40 விடைகள்

  நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்

 திரண்டு, நிக‌ண்டு, வெகுண்டு, வறண்டு, உருண்டு

 மற்றவற்றுடன் சேராதது: நிகண்டு, ஒரு பெயர்ச்சொல்.  மற்ற நான்கு சொற்களும் வினையெச்சங்கள், அதாவது இன்னொரு வினைச் சொல் உடனடியாக வந்தால்தான் முழுமை பெறும்:
வெண்ணெய் திரண்டு வந்தது.

பீமன் வெகுண்டு எழுந்தான்.

  காவிரி வறண்டு கிடக்கிறது (இப்போது மேட்டூர் அணை வழிகிறது!)
 

தரையில் உருண்டு, புரண்டு அழுதான் (இரண்டு வினையெச்சங்கள்)

நிகண்டு என்பது புலவர்களுக்கு எதுகையாக அமைந்த சொற்களை அடுக்கித் தரும் அகராதி!   புரண்டு, திரண்டு சேர்ந்து வருமா என்று சூடாமணி நிகண்டில்  பார்க்க வேண்டும்.


Comments

GUNA said…
சூடா       மணி நிகண்டாம்  செந்தமிழ் நூலினை
நாடா     மலும்பெறலாம்  நாம்தெளிவு --வாடாமல்
செந்தமிழ்ச் சான்றோர் தமிழ்த்தென்றல் பாடிய
இந்தப்பா  தன்னைப் படித்து

-------------------------------------------------------------
இருளில் ஒளியைக் குறள்வெண் பாவால்
இருமையும் ஒருமையும் அருகன் அருகே
பொருளும் அருளும் மார்க்கிஸ் காந்தி,
சித்தத் திருத்தல் செத்துப் பிறத்தல்
என்னும் நூல்களைப் பண்ணினன் அகவலால்.
பழைய உரைநடை விழுமிய அகவல்
பின்னே யாப்பணி துன்ன வேய்ந்தது;
உளறும் என் அகவலும் ஒருவித உரையே;
பொழுது படுக்கையில் கழிக்க நேர்ந்தபின்
கடிதில் உரைநடை முடிதல் கண்டேன்;
பாவின் அமைப்போ ஓவியம் ஆகி

உருண்டும் புரண்டும் திரண்டும் நிற்கும்

மொழிநத பின்னும் அழிதல் அரிதாம்;
ஆதலின் பாவால் ஓதலைக் கொண்டேன்”
------------------------------------------------------------
முதுமை உளறல்
GUNA said…
"'முதுமை உளறல் "' என்னும் நூலின் ஆசிரியர்
தமிழ்த்தென்றல்  என்றும் திரு,வி,க. என்றும்
நாம் அறிந்த திரு வி. கல்யாணசுந்தரனார்
அவர்கள்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...