Skip to main content

திரிவெடி 18 விடை

 

நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்:

சித்திரை, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி 

  என்னுடைய கணிப்பில் சேராதது, ஐப்பசி. மற்ற நான்கு மாதங்களிலும் பௌர்ணமி விசேஷமானது. சில ஊர்களில் பெருந்திரளாக பக்த லட்சங்கள் திரள்வார்கள்.

சித்திரைப் பௌர்ணமியில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் திருநாள்.

கார்த்திகைப் பௌர்ணமியில்  திருவண்ணாமலையில் தீபம்.

தை மாதம் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி;  தைப்பூசம் என்று முருகன் கோவில் பால்குடம் அலகு குத்துவது என்று விசேஷம். பழனி, சிங்கப்பூர், மலேஷியா என்று பல இடங்களில்.   (நான்கைந்து ஆண்டுகளுக்கும் முன்பு அது தமிழக அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது).

மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் பௌர்ணமி, கும்பகோணத்தில் கொண்டாட்டம். (பன்னிரண்டாண்டுக்கு ஒரு முறை அது மகாமகம்).

ஐப்பசியில் அமாவாசைதான் (வட இந்தியாவில்) தீபாவளி; பௌர்ணமி எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அப்படி ஏதும் விசேஷம் என்று இருந்தால் அறிந்தவர்கள் கூறவும்.
(பக்திப் பத்திரிகைகள், ஜோதிடப் பத்திரிகைகளைப் படித்தால் எல்லா நாளும் விசேஷம் என்று தோன்றும். அதைத் தள்ளிவிடுவோம்).

வேறு விடைகளும் சில வித்தியாசமான பார்வையில்  வந்திருக்கின்றன.  பார்த்து ரசியுங்கள்.

 
விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

Comments

Anonymous said…
ஐப்பசி போர்ணமி அன்றுதான் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. உண்மையில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முக்கிய விழா அந்தமாத பௌர்ணமி அன்றே வரும். வைகாசி விசாகம்; ஆவணி அவிட்டம்; ஆருதரா தரிசனம்; பங்பகுனி உத்திரம் இவ்வாறு
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
Vanchinathan said…
நன்றி நடராஜன்.
எல்லா கோவில்களிலும் ஒரு பலகையில் எழுதிவிடுவார்கள்: வரப்போகும் விசேஷங்கள் என்னவென்று. ஒவ்வொரு மாதத்துக்கும் ஐந்தாறு நாட்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். என்னுடைய தினசரி காலண்டரில் (எப்போதும் சிரிக்கும் முருகன், ராணி முத்து, ஐம்பது ரூபாய்) தேதியைக் கிழித்தால் எல்லா நாட்களுக்கும் இந்த ஊரில், இன்று, இந்த சாமி தரிசனம் என்று ஏதாவது இருக்கும்.
,
அதைக் கணிசமான பக்தர்கள் கொண்டாடுகிறார்களா அதற்காக ஒன்று கூடுகிறார்களா என்று கேட்டால் ஐப்பசிப் பௌர்ணமியைக் கணக்கில் கொள்ள முடியாது.

---வாஞ்சிநாதன்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.