Skip to main content

Posts

விடை 3627

இன்று காலை வெளியான வெடி பணியாள் குழு விலக அப்பணி பற்றி  வெளியே  யோசி (5) இதற்கான விடை:   சிப்பந்தி = சிந்தி   + ப்ப  (அப்பணி ‍- அணி) இன்று அனுப்பப்பட்ட விடைகள்  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள  இங்கே செல்லவும்.  நேற்று  வெளியிட்ட  பூங்கோதையின்  குறள் வளைப்  புதிர்: வானிகர் கூந்தல் இருக்காத வனின்இளக உற்றப் பயனாய் இறுக. அது பின் வரும் திருக்குறளின் மாற்றுவடிவம்: இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   

Solution to Krypton 119

Today's  clue: Place one warhead in the booth and refuse to co-operate (9) No, this is not a tip on how to disrupt the upcoming parliamentary elections. Simply place ONE and W(arhead) in STALL (booth). When a politician stonewalls an investigation it shows refusal  to co-operate. Here is the list of all the solutions submitted today.

உதிரிவெடி 3627

உதிரிவெடி 3627 (மார்ச் 31, 2019) வாஞ்சிநாதன் ******************* பணியாள் குழு விலக அப்பணி பற்றி  வெளியே  யோசி (5) Loading...

விடை 3626

இன்று காலை வெளியான வெடி: நச்சு ஏரியின் நீரை நகுலன் பருகிய பின் திரௌபதிக்கு எத்தனை உலகங்கள் ? (5) காட்டில் வேட்டையாடிக்  களைத்திருந்த பாண்டவர்கள் தாகத்திற்கு நீரெடுத்துவர முதலில் நகுலன் சென்றான்.  தண்ணீரைக் குடிக்கும் முன் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்ட யக்ஷனை மீறியதால் விஷமான நீர் நகுலன் சாகக் காரணமானது. அதனால் ஐந்து பதிகளைப் பெற்ற திரௌபதிக்கு அச்சமயம் பதிநான்கு என்றாகி விட்டது. (அதன் பின் மற்ற சகோதரர்களும் ஒவ்வொருவராய் இதே போல் மாண்டுபோக தருமர், பொறுமையாய்க் கேள்விகளுக்கு பதிலளித்து சகோதரர்களை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்தார். மஹாபாரதத்தின் ஆழமான தத்துவங்களடங்கியது இந்த பகுதி.)  இன்றைய புதிர் முதலில் நகுலன் இறந்த தருணத்தை அடிப்படையாகக் கொண்டது.   ஆனால் பதினநான்கை நான்கு பதிகள் என்று மாற்றிச் சிந்திக்கும் அழகான  கற்பனை கொண்டவர்கள்  ஈரேழு உலகங்களிலும் வெகு சிலர்தான் இருக்கிறார்கள். அது நானில்லை. பூங்கோதைதான் இதற்குச் சொந்தக்காரர். அவருடைய புதிரை லேசாக மாற்றிவிட்டிருக்கிறேன். " ராமர் காட்டுக்கு எத்தனை வருஷம் போனா எ...