Skip to main content

உதிரிவெடி 4150

உதிரிவெடி 4150 (ஆகஸ்டு 22, 2021)
வாஞ்சிநாதன்
*************************
உதிரிவெடியில் பழைய வெடிகள் மீண்டும் கருத்துரைப் பகுதியில் வெளிவருவதைப் படித்த போது "கல்யாணி" ராகம் பற்றிய புதிருக்கு ராமகிருஷ்ண ஈஸ்வரன் "கல்யாணியின் ஜீவனே அதன் பிரதி மத்யமம் தான். கல்யாணியில் சுத்த மத்யமம் கிடையாது. ஆகவே,
சுத்தமாக மத்யமம் இன்றி கணினியால் அமைக்கப்பட்ட சம்பூரண ராகம்! (4)
என்று இருந்தால் இன்னமும் மெருகூட்டியிருக்குமே என்கிறார். நிச்சயம். இதற்கு இசை பற்றிய என்னுடைய "அறிவில்" உள்ள ஓட்டைதான் காரணம். புத்தகத்தைப் படித்து, கராத்தேயும் நீச்சலும் கற்றுக் கொள்ள முடியுமா? அப்படி முடியும் என்று இசையை நினைத்ததால் வந்த வினை இது. பாட்டைக் கேட்டும், பாடிப் பழகியும் இசையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். கேட்டால் புரிந்தால்தானே ...:
இன்றைய வெடிக்கு வருகிறேன்:
வஞ்சகி தலைகால் மாற்றிய போராட்டம் ஈன்ற முன்னேற்றம் (5)

Comments

Raghavan MK said…
அருமையான புதிர்! அமர்க்களமான அமைப்பு!
வாழ்த்துகள்! 💐💐💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.