Skip to main content

விடை 4234

நேற்று வெளிவந்த வெடி:
வரிவிலக்கு பெற்ற மூத்த குடிமகனாரை இதைச் சொல்லி அழைப்பது முறையல்ல (3)
அதற்கான விடை: பெயர் = பெரியவர் - வரி
பெரியவர் = மூத்த குடிமகனார்
"பெயரை" என்றும் சிலர் விடை தந்திருக்கிறார்கள். அதுவும் ஏற்றுக்கொள்ளலாம்
அது, ஒன்றுமில்ல்லை. நண்பர்கள் சிலர் மூத்த குடிமகனாகி ஓய்வு பெற்றுவிட்டார்கள். எனக்கும் அந்த நாள் வந்தால் அப்போது எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டியிருக்கும் என்று படித்துக் கொண்டிருந்தேன். அதுதான் இன்றைய புதிராகிவிட்டது.

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*************************
*A peek into today's riddle!*
*Vanchinathan's உதிரிவெடி 4234*
************************
*நினைவில் மலர்ந்த பாடல் வரிகள்!*
*********
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா

ஊரைச் சொன்னாலும்
உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்

பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா

(தாயை காத்த தனயன்:1962)
************************
_வரிவிலக்கு பெற்ற மூத்த குடிமகனாரை இதைச் சொல்லி அழைப்பது முறையல்ல (3)_

_மூத்த குடிமகனாரை_
= *பெரியவரை*

_வரிவிலக்கு பெற்ற பெரியவரை_
= _Indicates to delete வரி from பெரியவரை_
= *பெ(ரி)ய(வ)ரை*
= *பெயரை*

_இதைச் (சொல்லி அழைப்பது முறையல்ல)_
= *பெயரை* _(சொல்லி அழைப்பது முறையல்ல)_
************************
*"வரிவிலக்கு''* அருமையான deletion indicator.!
************************
மூத்த குடிமகனாரை பெயரை சொல்லி அழைப்பது முறையல்ல என்பதால்தான், *பெரிசு* என அழைக்கிறது, அநேக இளவட்டங்கள்!😂
************************
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...