Skip to main content

திரிவெடி 21 விடை

  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

 வேழம், திருமால், முழுமை,  மாவிலை,  சங்கு  

வேழம் = வாரணம்
திருமால் = நாரணன்
முழுமை = பூரணம்
மாவிலை = தோரணம் (??)
இந்த நான்கும் முதல் சொற்களாக‌ எதுகையாக ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடலொன்றின் நான்குவரிகளில் உள்ளன.

கிட்டதட்ட இரண்டுமாதத்தில்  புது இசைவடிவில் வெளியானதிலிருந்து நூறுமுறைக்கு மேல் இப்பாடலைக் கேட்டுவிட்டேன்/பார்த்துவிட்டேன்.
அது  ஒலித்துக்கொண்டிருக்கும்போது செய்த வெடி.

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
 
 
அதனால் இவற்றோட ஒட்டாத சொல் சங்கு. ஆனாலும் இப்பபாடலை முழுதாகப் படித்தால் ஆண்டாள் வெண்சங்கிடம் என்ன கேட்கிறாள் என்று அறிந்து அதன் சூட்சுமத்தைப் புரிந்தால் வியந்துபோவீர்கள்.

இங்கே இசையாகக் கேட்கலாம். இங்கே பரத‌நாட்டியத்துடன் காணலாம்.
 
 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.