Skip to main content

எஸ் பார்த்தசாரதியின் குறுக்கும் நெடுக்கும்

திரு எஸ். பார்த்தசாரதி ("அபாகு") இம்மாதம் "குறுக்கும் நெடுக்கும்" என்ற தலைப்பில் புதிர்களை அறிமுகப்படுத்தும் நூலொன்று எழுதி வெளியிட்டுள்ளார். இதன் வரலாற்றை ஆங்கிலப் புதிர்களில் தொடங்கி விவரித்து எழுதியுள்ளார். எனக்கு அதில் நிறைவை அளிக்கும் விஷயத்தை ஞாபகமாகச் செய்திருக்கிறார்: தமிழில் அடியேனை புதிரை ஆரம்பித்து வைத்தவன் என்று கூறிவருகின்றனர். தொடர்ந்து வருடக்கணக்காக புதிர்களை தென்றல் மாத இதழிலும் அதற்கு முன்பே வாரமொருமுறை சென்னை ஆன்லை நிறுவனத்தாரின் ஆறாம்திணை இதழிலும் நான் புதிர்களை வெளியிட்டதால் அப்படிப் பலரும் எண்ண இடமிருக்கிறது. ஆனாலும் அது சரியில்லை. அதை நானொருமுறை மறுத்து, என் ஒரே ஒருவனுக்காக சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் பேராசிரியராய் பணியாற்றிய டாக்டர் கி பாலசுப்ரமணியன் 1985 இல் எழுதி அமைத்ததை (அச்சில் வெளியாகாதது) இணையத்தில் வெளியிட்டேன். அத்தகவலையும், அப்புதிரையும் இந்நூலில் சேர்த்ததில் எனக்கு மகிழ்ச்சி.
புதிர் வரலாற்றைச் சொல்வதோடு அமையாமல் குறுக்கெழுத்துப் புதிருக்குப் புதிதாக வருபவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் விதமாகவும் பார்த்தசாரதி எழுதியுள்ளார். "முள்ளும் மலரும்" என்ற விடை வருமாறு குறுக்கெழுத்துப் புதிர் எப்படி அமைப்பார்கள், டம்ப் ஷராட் (dumb charade) விளையாட்டில் எப்படிச் செய்வார்கள் என்று வேறுபடுத்திக் காட்டியதும் சிறப்பு (ஆசிரியனாக இருக்கும் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது எப்படி என்று பாடம் சொல்லிக் கொடுக்கிறது). முழுவதும் இந்த புத்தகத்தை 2023 முடிவதற்குள் படித்து விடுவேன். இதை வெளியிட்டவர்கள் ஜெயா பப்ளிகேஷன். மின்னஞ்சல் முகவரி reachjayapublications@gmail.com.

Comments

Wishing all success to the book and Mr. Parthasarathy. Very happy to note the nice tribute to Dr. KB.
balakrishnan said…
Excellent venture. Great. I recollect my old memories. Dr vanchi and few others partcipated in a gathering arranged by Shri பார்த்தசாரதி and his wife
I was forunate to attend that meeting. My best wishes to Shri Partha sarathi AVL
V.R. Balakrishnan
Ramki Krishnan said…
Great effort by Thiru Parthasarathy. I am going through the book now!
Partha said…
குருவின் பாராட்டுக்கு நன்றி.
This year, I have also written a book in English on Cryptic crosswords. For those interested in buying the book(s) the link is
https://sparthasarathy.biz/buymycwbooks.html
Thanks again, Vanchi sir
Parthasarathy

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.