Skip to main content

விடை 4229

நேற்று காலை வெளியான வெடி:
இரவோடிரவு கஷ்டம் (4)
இதற்கான விடை அல்லல்
அல் = இரவு
இரவோடு இரவு என்றால் அல் அல் என்றிருக்கும். ஆனால் இரவோடிரவு என்றதால் அல்லல் (ராவோடு ராவா என்றும் சொல்வார்கள்).
சேர்த்தெழுதியதைப் பிரித்தும், பிரித்து எழுதியதைச் சேர்த்தும் வேறு பொருள் கொண்டு வருவது சிலேடையில் ஒரு வகை.
காளமேகம் வாழைப்பழத்துக்கும் பாம்புக்கும் சிலேடையாக "நஞ்சிருக்கும் (நஞ்சு இருக்கும்/நைந்திருக்கும்) என்று எழுதியுள்ளார். டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன் "பணம் உடையவர் சேர்ந்தாலும் அவரிடையே உண்டு பற்றாக்குறை (2)" என்று நேற்று புதிராடுகளத்தில் வெடி வீசியுள்ளார்.

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*உதிரிவெடி: 4229*
**********************
_" *அல்லல்* " துள்ளலான பு.திர்!_

*சிக்கனம், கருத்து இரண்டுக்கும் சபாஷ் சொல்லவேண்டும்!*
**********************
_இரவோடிரவு கஷ்டம் (4)_ 

_இரவு_ = *அல்*

_இரவோடிரவு_
*= அல்+அல்*
= *அல்லல்*
= _கஷ்டம்_
**********************
*கம்ப இராமாயணம்*
_என் சொல்லினால் சுடுவேன்_
******
சீதையை தேடி வந்த அனுமன் அவளை அசோக வனத்தில் காண்கிறான். அவளிடம், "நீங்கள் பேசாமல் என் தோளில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களை இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன். மத்தது எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.

சீதை அதை மறுக்கிறாள். "அனுமனே, எனக்கு *துன்பம்* செய்யும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகங்கள் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன். அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று செய்யாமல் இருக்கிறேன்" என்கிறாள்.

*_பாடல்_*

_*அல்லல்* மாக்கள் இலங்கை அது ஆகுமோ?_
_எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்_
_சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்_
_வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்._
**********************
💐🙏🏼💐
RKE said…
மிக்க நன்றி ஐயா

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...