Skip to main content

விடை 4229

நேற்று காலை வெளியான வெடி:
இரவோடிரவு கஷ்டம் (4)
இதற்கான விடை அல்லல்
அல் = இரவு
இரவோடு இரவு என்றால் அல் அல் என்றிருக்கும். ஆனால் இரவோடிரவு என்றதால் அல்லல் (ராவோடு ராவா என்றும் சொல்வார்கள்).
சேர்த்தெழுதியதைப் பிரித்தும், பிரித்து எழுதியதைச் சேர்த்தும் வேறு பொருள் கொண்டு வருவது சிலேடையில் ஒரு வகை.
காளமேகம் வாழைப்பழத்துக்கும் பாம்புக்கும் சிலேடையாக "நஞ்சிருக்கும் (நஞ்சு இருக்கும்/நைந்திருக்கும்) என்று எழுதியுள்ளார். டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன் "பணம் உடையவர் சேர்ந்தாலும் அவரிடையே உண்டு பற்றாக்குறை (2)" என்று நேற்று புதிராடுகளத்தில் வெடி வீசியுள்ளார்.

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*உதிரிவெடி: 4229*
**********************
_" *அல்லல்* " துள்ளலான பு.திர்!_

*சிக்கனம், கருத்து இரண்டுக்கும் சபாஷ் சொல்லவேண்டும்!*
**********************
_இரவோடிரவு கஷ்டம் (4)_ 

_இரவு_ = *அல்*

_இரவோடிரவு_
*= அல்+அல்*
= *அல்லல்*
= _கஷ்டம்_
**********************
*கம்ப இராமாயணம்*
_என் சொல்லினால் சுடுவேன்_
******
சீதையை தேடி வந்த அனுமன் அவளை அசோக வனத்தில் காண்கிறான். அவளிடம், "நீங்கள் பேசாமல் என் தோளில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களை இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன். மத்தது எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.

சீதை அதை மறுக்கிறாள். "அனுமனே, எனக்கு *துன்பம்* செய்யும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகங்கள் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன். அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று செய்யாமல் இருக்கிறேன்" என்கிறாள்.

*_பாடல்_*

_*அல்லல்* மாக்கள் இலங்கை அது ஆகுமோ?_
_எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்_
_சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்_
_வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்._
**********************
💐🙏🏼💐
RKE said…
மிக்க நன்றி ஐயா

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.