இன்று காலை வெளியான வெடி திருமகளே பரம்பரையில் வாய்த்திருப்பதால் ஏற்பாடுகளில் ஒரு பரபரப்பு (5) இதற்கான விடை: களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.
Comments
சித்தகத்தி சித்தம் கலக்கியது.
*************************
_உதிரிவெடி 4168 வாஞ்சிநாதன்_
*************************
அகத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவை *அகத்தி, சித்தகத்தி, சீமை அகத்தி* ஆகிய மூலிகைகள்.
*************************
*சித்தகத்தி என்ற சிற்றகத்தி*
சிறிய இலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் உடைய மென்மையான சிறுமரம். மஞ்சள் பயிருக்கு நிழல் தரும் வகையில் தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது. செம்பை எனவும் பெயர் பெறும். கருஞ்சிவப்பு மலர்களை உடையவை. *கரும்செம்பை* எனப்படும். இலை பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
*************************
_மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6)_
_மாற்றாந்தாய்_
= *சித்தி*
_புத்தகம் நடுவே_
= _[பு]த்தக[ம்]_
= *த்தக*
*சித்தி* _ஒளித்துவைத்த_ *த்தக*
= *சி(த்தக)த்தி*
= *சித்தகத்தி*
= _ஒரு தாவரம்_
*************************
_*சித்தகத்தி* பூக்களே சுத்தி வர பாக்குதே_
_அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே .._
_அத்த மகனே அத்த மகனே_
_சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்_
(படம் : ராஜகுமாரன் )
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
1994ல் இளையராஜா இசையில் காற்றில் தவழ்ந்து வந்து நம் செவி மடல்களை வருடிய பாடல். இந்த பாடலை தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு இதில் வரும் *சித்தகத்தி* பூக்களை பற்றி தெரிந்துவைத்துள்ளோமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக வரும்.
உண்மையில் பாடல்களின் இசையை போலவே *சித்தகத்தி* பூக்களின் இதழ்களும் மென்மையானவை.
மென்மையானவை மட்டுமல்ல மருத்துவக்குணங்களும் கொண்டவை.
*சித்தகத்தி* பயிரிட்டு நான்கு மாதங்களில் பூ பூக்க ஆரம்பித்து விடும். இதன் பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது. நாடி நடையை அதிகரிக்கவும், தாய்ப்பாலை குறைக்கவும், வயிற்றுப் பூச்சியை அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கவும் பயன்படும்.
************************
_பழமொழி_
-----------------------
*_‘வெந்து கெட்டது முருங்கை,_*
*_வேகாமல் கெட்டது அகத்தி’_*
என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதாவது, முருங்கைக் கீரையை அதிகமாக வேக வைத்துவிட்டால், அதன் பலன்கள் பாதிக்கப்படும். அகத்தியை நன்றாக வேக வைக்காவிட்டால் அகத்திக் கீரையின் சத்துகள் மனித உடலுக்கு கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.
*************************
💐🙏🏼💐
கடந்த இரண்டுமுறையாக சிறிது கடினத்தை உணர்கிறேன்
வாழ்த்துக்கள்.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்