Skip to main content

விடை 4168

இன்று காலை வெளியான வெடி:
மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6)
அதற்கான விடை: சித்தகத்தி = சித்தி + (பு) த்தக (ம்)

இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
அருமையான அமைப்புடன் கூடிய புதிர்.
சித்தகத்தி சித்தம் கலக்கியது.
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
_உதிரிவெடி 4168 வாஞ்சிநாதன்_ 
*************************
அகத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவை *அகத்தி, சித்தகத்தி, சீமை அகத்தி* ஆகிய மூலிகைகள்.
*************************
*சித்தகத்தி என்ற சிற்றகத்தி*

சிறிய இலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் உடைய மென்மையான சிறுமரம். மஞ்சள் பயிருக்கு நிழல் தரும் வகையில் தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது. செம்பை எனவும் பெயர் பெறும். கருஞ்சிவப்பு மலர்களை உடையவை. *கரும்செம்பை* எனப்படும். இலை பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
*************************
_மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6)_

_மாற்றாந்தாய்_
= *சித்தி*

_புத்தகம் நடுவே_
= _[பு]த்தக[ம்]_
= *த்தக*

*சித்தி* _ஒளித்துவைத்த_ *த்தக*
= *சி(த்தக)த்தி*
= *சித்தகத்தி*
= _ஒரு தாவரம்_
*************************
_*சித்தகத்தி* பூக்களே சுத்தி வர பாக்குதே_

_அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே .._

_அத்த மகனே அத்த மகனே_
_சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்_ 
(படம் : ராஜகுமாரன் )
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
1994ல் இளையராஜா இசையில் காற்றில் தவழ்ந்து வந்து நம் செவி மடல்களை வருடிய பாடல். இந்த பாடலை தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு இதில் வரும்  *சித்தகத்தி* பூக்களை பற்றி தெரிந்துவைத்துள்ளோமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக வரும்.

உண்மையில் பாடல்களின் இசையை போலவே *சித்தகத்தி* பூக்களின் இதழ்களும் மென்மையானவை.

மென்மையானவை மட்டுமல்ல மருத்துவக்குணங்களும் கொண்டவை.

*சித்தகத்தி* பயிரிட்டு நான்கு மாதங்களில் பூ பூக்க ஆரம்பித்து விடும். இதன் பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது. நாடி நடையை அதிகரிக்கவும், தாய்ப்பாலை குறைக்கவும், வயிற்றுப் பூச்சியை அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கவும் பயன்படும்.
************************
_பழமொழி_
-----------------------
*_‘வெந்து கெட்டது முருங்கை,_*
*_வேகாமல் கெட்டது அகத்தி’_*

என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதாவது, முருங்கைக் கீரையை அதிகமாக வேக வைத்துவிட்டால், அதன் பலன்கள் பாதிக்கப்படும். அகத்தியை நன்றாக வேக வைக்காவிட்டால் அகத்திக் கீரையின் சத்துகள் மனித உடலுக்கு கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.
*************************
💐🙏🏼💐
balakrishnan said…
K
கடந்த இரண்டு‌முறையாக சிறிது கடினத்தை உணர்கிறேன்
வாழ்த்துக்கள்.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.