Skip to main content

விடை 4153

இன்று காலை வெளியான வெடி:
உரிய காலம் நிலையான ஸ்வரம் மாறி வரும் (4) அதற்கான விடை: பருவம் = ப + ருவம் (வரும்)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
[9/13, 21:34] stat senthil: அது எப்படிங்க ப நிலையான சுரம். மத்த சுரங்கள் நிலையற்றவையா?

[9/13, 21:38] Ravi Subramanian: In an octave, there is only one Sa and one Pa. Ma could be one of two. Ri, Ga combination has 6 possibilities. So does Da, Ni combination. So Sa and Pa are fixed in a sense.

[9/13, 21:40] M K Raghavan: ஸ்வரங்களுக்கும் அதிர்வெண் விகிதம் ஒன்றிலிருந்து இரண்டுக்குள் இருக்கும். அதிர்வெண் 1 என்றால் அந்த ஸ்வரம் ச. அதிர்வெண் 1.5 என்றால் அந்த ஸ்வரம் ப. இவை இரண்டும் முக்கியமான ஸ்வரங்கள். இந்த ஸ்வரங்களில் எந்த உட்பிரிவும் கிடையாது. ச1, ச2 என்றோ அல்லது ப1, ப2 என்றோ ஸ்வரங்கள் இல்லை. ஆக, அந்த 12 சுருதிகளில் ச, ப என்னும் இரண்டும் *நிலையான ஸ்வரங்கள்*

[9/13, 21:40] stat senthil: 😇😇

[9/13, 21:40] stat senthil: 😭😭😭

[9/13, 21:45] Ravi Subramanian: https://beautifulnote.com/blog/2017/12/03/carnatic-swarasthanas.html
More details here.

[9/13, 21:46] Rohini Ramachandran: 👍

[9/13, 21:57] chithanandam: Good explanation. Thanks.
Raghavan MK said…
*A peek into உதிரிவெடி # 4153*
*************************
_*பருவம்* எனது பாடல் பார்வை எனது_
_ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல்_

_கருணை உனது கோயில் கலைகள் உனது காதல்_

(ஆயிரத்தில் ஒருவன் :1965)
*************************
தமிழர்கள் ஓர் ஆண்டை கார்காலம், குளிர்காலம், ​முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு *பருவங்களாக* பிரித்தனர்.
*************************
_உரிய காலம் நிலையான ஸ்வரம் மாறி வரும் (4)_ 

_நிலையான ஸ்வரம்_
= *ப*

_மாறி_
= _indicator for rearranging வரும்_
= *ருவம்*

_உரிய காலம்_
= *ப+ ருவம்*
= *பருவம்*
************************* *பிள்ளைத்தமிழ்* என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாகஉருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். 

இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் *பருவங்களாகப்* பிரித்துக் காண்பர். ஒவ்வொரு  *பருவத்துக்கும்* பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு.
🌺🌺🌺🌺🌺🌺🌺
காப்பு என்பது சின்னஞ்சிறு குழந்தையைக் காப்பாற்றி அருள்செய்யும் படி பல்வேறு தெய்வங்களை வேண்டிப் பாடுவதாகும். ஒரு காலை மடக்கியும், ஒரு காலை நீட்டியும் இரு கைகளை தரையில் ஊன்றியும் தலையை அசைத்தாடும் பருவம் செங்கீரையாகும். குழந்தையைத் தொட்டிலில் இட்டு, நாக்கை அசைத்து ஒலியை எழுப்பி உறங்க வைக்கும் பருவம் தாலப்பருவம். குழந்தை தன் இரு கைகளையும் சேர்த்து ஓசை எழக் கொட்டும்படி கேட்கும் பருவம் சப்பாணி பருவம். பெற்றோர் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து முத்தம் தரும்படி வேண்டுவது முத்தப்பருவமாகும். தளர்நடையிடும் பிள்ளையை வருக! வருக! என்று அழைத்து மகிழ்வது வருகையாகும். அம்புலி என்றால் நிலா என்று பொருள். வானில் உலவும் நிலாவைக் குழந்தையோடு விளையாட அழைக்கும் பருவம் அம்புலி.

இருவகைப் பிள்ளைத்தமிழுக்கும் ஏழு பருவங்கள் மட்டுமே பொதுவாக அமையும். 
மற்ற மூன்று பருவங்களும் வேறுபடும். *காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி* ஆகிய ஏழு பருவங்களும் இரண்டு பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை. *சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்கல், சிறுதேர் உருட்டல்* ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டுமே வரும். பெண்பாற் பிள்ளைத்தமிழில் *நீராடல், அம்மானை ஆடல், ஊசல் ஆடல்* ஆகிய மூன்று பருவங்களும் வரும். 
🌹🌸🌹🌸🌹🌸🌹🌸
💐🙏🏼💐
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 14-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஏசி துயரம் போகும்படித் திரட்டியதும் கலக்கமடையும் (3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 14-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா
சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது

*திட்டி திட்டி பேசினாலும் வட்டியில சோறு வப்பா*
ஒட்டிபோன ஒடம்புன்னாலும்
உசுர விட்டு பாசம் வப்பா
திண்னை வாயில் *திட்டினாலும்*
என்னை அவ நொந்ததில்ல..
கந்தல் துணி கட்டினாலும்
கண் கசங்க பார்த்தயில்லை
பொன்ன கேக்கும் வாயில்
ஒரு சேலை கேட்ட ஆத்தா
நூல கூட நானும் உனக்கு வாங்கித் தந்ததில்ல
அடி...ஆத்தா ஆ………

(என்னை விட்டுப் போகாதே-1988 )
*************************
_ஏசி துயரம் போகும்படித் திரட்டியதும் கலக்கமடையும் (3)_

_துயரம் போகும்படித் திரட்டியதும் கலக்கமடையும்_

= _indicator to remove *துயரம்* from *திரட்டியதும்*_

= *திரட்டியதும் - துயரம்*
= *திட்டி*
= _ஏசி_
*************************
*திட்டுதல், ஏசுதல், வைதல்,பேசுதல்-----* *வட்டார வார்த்தைகள்.*
*********************
*திட்டுதல்:*
இது தமிழில் அனைவராலும் அறியப்பட்ட பொதுவான வார்த்தை.
ஒருவன் என்னை திட்டினான் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியில் வாழ்பவர்களாலும் புரிந்து கொள்ளமுடியும்.

*ஏசுதல்:*
இது நெல்லை சுத்துவட்டார வார்த்தை,
என்ன ஏசிபுட்டான் என்று அன்போடு(!?)சொல்லுவார்கள். இதை கூட மற்ற பகுதியில் வாழ்பவர்களால் புரிந்து கொள்ளமுடியும்.
"மெதுவாய் கொடுங்க" என்பதற்கு "பைய தாங்க" என்று சொல்லுவதன் மூலம் பல சினிமா மற்றும் பத்திரிகை நகைச்சுவைகளுக்கு வித்திட்டவர்கள்.

*வைதல்:*
இது அக்மார்க் மதுரை வார்த்தை.
"வஞ்சிட்டான்" என்று தான் வட்டார மொழியில் சொல்வார்கள்.
"வஞ்சித்துவிட்டான்" என்ற சொல்லிருந்து வந்திருக்கலாம். தமிழ் வளர்த்த மதுரை அல்லவா.
முழு மரியாதை இல்லாவிட்டாலும் "அண்ணே" என்று அன்போடு அழைக்கும் ஊரிது.

*பேசுதல்:*
கொங்கு வட்டார பகுதிகளில் மேலே இருக்கும் மூன்று தலைப்பிற்கும் இது தான் பெயர் இங்கே. முழு மரியாதைக்கு பெயர் பெற்ற ஊர் என்பதால், திட்டுவதை கூட இங்கே இப்படி தான் சொல்லுவார்கள். சிறு குழந்தை கூட "வாங்க","போங்க" என்று அழைப்பது இனிமையாக இருக்கும். வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரும் அனைவரையும் கையெடுத்து கும்பிடும் பழக்கம் இவர்களது.
ஒரு கையால் ஹாய் சொல்லி திரியும் இந்த நாகரிகத்தில், இன்றும் கும்பிடும் பழக்கத்தை வைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

valpaiyan.blogspot.com
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/14, 07:01] nagarajan: திட்டி

[9/14, 07:01] A Balasubramanian: திட்டி
A.Balasubramanian

[9/14, 07:02] திரைக்கதம்பம் Ramarao: திட்டி

[9/14, 07:03] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏திட்டி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/14, 07:05] Meenakshi: விடை:திட்டி

[9/14, 07:05] Dhayanandan: *திட்டி*

[9/14, 07:08] V N Krishnan.: ஏசி. திட்டி

[9/14, 07:08] Rohini Ramachandran: திட்டி

[9/14, 07:16] மீ.கண்ணண்.: இன்றைய விடை திட்டி

[9/14, 07:17] stat senthil: திட்டி

[9/14, 07:18] G Venkataraman: திட்டி

[9/14, 07:20] joseph amirtharaj: திட்டி
[
[9/14, 07:24] Dr. Ramakrishna Easwaran: திட்டி
திரட்டியதும் minus துயரம்

[9/14, 07:24] Usha Chennai: திட்டி

[9/14, 07:35] prasath venugopal: திட்டி
[
[9/14, 07:40] ஆர். நாராயணன்.: திட்டி

[9/14, 07:44] akila sridharan: திட்டி

[9/14, 07:54] Bhanu Sridhar: திட்டி

[9/14, 07:55] sridharan: திட்டி

[9/14, 08:04] siddhan subramanian: திட்டி
[
[9/14, 08:12] Ramki Krishnan: திட்டி
[
[9/14, 08:13] ஆர்.பத்மா: திட்டி

[9/14, 08:21] Venkat: திட்டி 🙏🏾

[9/14, 08:36] மாலதி: திட்டி

[9/14, 08:44] A D வேதாந்தம்: விடை=திட்டி(வேதாந்தம்)

[9/14, 08:47] Bharathi: *திட்டி*

[9/14, 09:37] கு.கனகசபாபதி, மும்பை: திட்டி
[
[9/14, 10:03] sankara subramaiam: திட்டி

[9/14, 10:43] shanthi narayanan: திட்டி

[9/14, 10:54] வானதி: *திட்டி*

[9/14, 17:21] Viji - Kovai: திட்டி

[9/14, 22:46] Revathi Natraj: திட்டி

****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 15-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
அரியணை ஏறாத பாண்டியன் கலைத்திட்ட மெய்யற்ற வளத்தில் இழு (5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 15-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*வழுதி* - என்பது பாண்டியரை குறிக்குஞ்சொல் - *இளம் வழுதி என்பது இளமையான பாண்டியன்* எனப்படும்.
கூடல், மருங்கை, கொற்கை ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.
***********************
_அரியணை ஏறாத பாண்டியன் கலைத்திட்ட மெய்யற்ற வளத்தில் இழு (5)_

_மெய்யற்ற வளத்தில்_
= denotes removal of மெய்யெழுத்து in _வளத்தில்_
= _வள[த்]தி[ல்]_
= *வளதி*

_கலைத்திட்ட_
= Anagram indicator for *(வளதி+ இழு)*
= *இளவழுதி*

_அரியணை ஏறாத_
= *இள* (இளவரசன்)
_பாண்டியன்_
= *வழுதி*

_அரியணை ஏறாத பாண்டியன்_
= *இளவழுதி*
*************************
_'வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-1_
****
*ஆழிநெடுவேலெறிந்த இளவழுதி*

மதுரையில் பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த *இளவழுதியின்* அவைக்கு வடபுலத்தில் இருந்து வந்த பாணன் கன்னங்கரிய உடலும், வெண்ணிறமான பற்களும் வெள்ளை விழிகளும் கொண்டிருந்தான். தன் பெயர் சீர்ஷன் என்று அவன் சொன்னான். அவனை அவைக்காவலர் அறிவித்தபோது தன் புலவரவையில் அமர்ந்திருந்த பாண்டியன் *ஆழிநெடுவேலெறிந்த இளவழுதி,*
“அழைத்து வருக!”, என்று ஆணையிட்டான்.

அவன் அவைக்கு ஒவ்வொருநாளும் வடபுலத்திலிருந்து பாணரும் புலவரும் வந்துகொண்டிருந்தனர். ஆகவே மெல்லிய ஆவலே அவனிடமிருந்தது. ஆனால் வந்த பாணனின் தோற்றம் அவனை வியப்படையச் செய்தது. “வருக, பாணரே” என்று அவன் வரவேற்றான். அவைப்பீடம் அளித்து “உங்கள் வருகையால் முத்துக்களின் நிலம் மகிழ்கிறது” என்று முகமன் உரைத்தான். “அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான என் பெயர் சீர்ஷன். நான் தொல்குடிப் பாணன். வடக்கே இமைக்கணக்காடு என் குருநிலை” என்றான்.

(ஜெயமோகன்)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/15, 07:00] திரைக்கதம்பம் Ramarao: இளவழுதி

[9/15, 07:01] A Balasubramanian: இளவழுதி
A.Balasubramanian

[9/15, 07:01] sathish: இளவழுதி
[
[9/15, 07:04] மாலதி: இளவழுதி
[
[9/15, 07:06] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏இளவழுதி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/15, 07:08] Meenakshi: விடை:இளவழுதி

[9/15, 07:09] stat senthil: இளவழுதி
[
[9/15, 07:12] மீ.கண்ணண்.: இளவழுதி
[
[9/15, 07:13] பாலூ மீ.: இளவழுதி

[9/15, 07:24] sridharan: இளவழுதி
[
[9/15, 07:24] Rohini Ramachandran: இள வழுதி
[
[9/15, 07:25] nagarajan: *இளவழுதி*
[
[9/15, 07:36] prasath venugopal: இளவழுதி

[9/15, 08:10] Ramki Krishnan: இளவழுதி

[9/15, 08:29] siddhan subramanian: இளவழுதி (இழு + வளதி (த் ல்)

[9/15, 08:45] ஆர். நாராயணன்.: இளவழுதி
[9/15, 08:49] Viji - Kovai: இளவழுதி
வளதி+இழு_கலைந்து

[9/15, 09:21] Bhanu Sridhar: இளவழுதி

[9/15, 10:23] கு.கனகசபாபதி, மும்பை: இளவழுதி

[9/15, 11:13] joseph amirtharaj: இளவழுதி

[9/15, 11:49] ஆர்.பத்மா: இளவழுதி
[
[9/15, 12:01] G Venkataraman: இளவழுதி
[9/15, 12:13] வானதி: *இளவழுதி*
:*Very tricky puthir*
*Nice*
இன்னிக்கு ரொம்ப பிடித்தது
நல்ல அமைப்பு

[9/15, 19:19] chithanandam: இளவழுதி

[9/15, 21:02] balagopal: இளவழுதி
[
[9/15, 21:04] shanthi narayanan: இளவழுதி

[9/15, 21:42] Revathi Natraj: இளவழுதி
[
[9/15, 22:34] sankara subramaiam: இளவழுதி



****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 16-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
சில துளிகளைத் தவறவிடு ஆனால் அது கரை புரண்டோடும் (3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 16-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
அம்மாவின் அணைப்பை *சிந்தாமல்* சிதறாமல் அள்ளித் தருகிறது......

அவளது புடவையும்!
😴💕
***********************
_*நான் ஒரு சிந்து காவடிச்சிந்து*_
_ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல_
_தந்தை இருந்தும் தாயும் இருந்தும்_
_சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல._
( *சிந்து பைரவி* 1985)
**********************
*காவடிச் சிந்து*
இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று.
இது காவடி ஆட்டத்திற்குப் பாடப்படும் இசைப் பாவகையாகும். முற்காலத்திலே முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகக் பால் எடுத்து வருபவர்கள் ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பொழுது அவர்களின் ஆட்டத்திற்குப் பாடப்படும் பாடல் வகைகளிலிருந்து *இக்காவடிச் சிந்து* என்ற பாவடிவம் தோன்றி உருவாகியது.
***********************
_சில துளிகளைத் தவறவிடு ஆனால் அது கரை புரண்டோடும் (3)_

_சில துளிகளைத் தவறவிடு_
= *சிந்து*

_ஆனால் அது கரை புரண்டோடும்_
= *சிந்து* ( _நதி_ )
**********************
_*சிந்து நதியின்* மிசை நிலவினிலே_
_சேரநன்னாட்டிளம் பெண்களுடனே_
_சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து_
_தோணிகளோட்டி விளையாடி வருவோம்_
*மஹாகவி பாரதியார்*
************************
*ரிக்வேதமும் சிந்துவும்.*

*ரிக்வேதம்* பல புராண ஆறுகளை விவரிக்கிறது, *அதில் ஒன்று "சிந்து".* ரிக்வேதத்தில் குறிப்பிப்பட்டுள்ள " *சிந்து* " என்பது இன்றைய சிந்து ஆறு என்று கருதப்படுகிறது,
************
*ராகம் சிந்துபைரவி:*
இந்திய இசைக்கு வெளியிலிருந்து வந்து பெருந் தாக்கத்தை விளைவித்து , இந்திய ராகங்களில் ஒன்றாக கலந்த ராகங்களில் முதன்மையானது *சிந்துபைரவி.*

வட இந்தியாவிலிருந்து வந்த ராகம் இது என கூறப்படுகின்ற இந்த ராகம் மத்திய கிழக்கு மற்றும் அரேபியாவில் அதிகம் புழக்கத்தில் உள்ள ராகமாகும். அரேபியர்கள் நமக்கு வழங்கிய கொடை இந்த சிந்துபைரவி.
***********************
*பாலசந்தர்* உருவாக்கிய *"சிந்து பைரவி* '' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
***********************
*சரித்திர நாயகி சிந்து*
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசமே அந்த இளம் பெண்ணின் மீது பார்வையைக் குவித்திருந்தது. உலகின் கவுரவமாகப் பார்க்கக்கூடிய அந்த விளையாட்டுத் திருவிழாவில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக முன்னேறிக்கொண்டிருந்தார் அவர். அவர் மீது தேசம் வைத்த நம்பிக்கை வீணாகவில்லை. *அரங்கம் அதிர வெள்ளிப் பதக்கத்தைப் பெறுவதற்காக அவர் தலைகுனிந்தபோது தேசமே தலை நிமிர்ந்தது!* 122 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற *முதல் இந்தியப் பெண்* என்ற சிறப்பையும் அப்போது சேர்த்தே பெற்றார். *அவர், ஒலிம்பிக் பதக்க மங்கை பி.வி.சிந்து* .
***********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[
[9/16, 07:02] V N Krishnan.: சிந்து (வற்றாத நதி )
[
[9/16, 07:02] stat senthil: சிந்து

[9/16, 07:04] திரைக்கதம்பம் Ramarao: சிந்து

[9/16, 07:06] A Balasubramanian: சிந்து
A.Balasubramanian

[9/16, 07:07] Meenakshi: விடை:சிந்து
[
[9/16, 07:09] மீ.கண்ணண்.: சிந்து

[9/16, 07:10] nagarajan: *சிந்து*

[9/16, 07:37] Bharathi: சிந்து

[9/16, 07:43] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏சிந்து🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/16, 08:24] prasath venugopal: சிந்து
[
[9/16, 08:41] மாலதி: சிந்து

[9/16, 09:38] Revathi Natraj: சிந்து
[
[9/16, 09:57] ஆர். நாராயணன்.: சிலது

[9/16, 10:03] கு.கனகசபாபதி, மும்பை: சிந்து
[
[9/16, 10:26] G Venkataraman: திவலை
[
[9/16, 11:14] ஆர்.பத்மா: சிந்து

[9/16, 11:23] joseph amirtharaj: சிந்து
[
[9/16, 13:10] Dhayanandan: *சிந்து*
[
[9/16, 12:59] siddhan subramanian: சிந்து
[.
[9/16, 16:20] balagopal: சித று..

[9/16, 18:36] Viji - Kovai: சிந்து

[9/16, 18:59] பாலூ மீ.: சிந்து.

[9/16, 20:08] sridharan: சிந்து

[9/16, 20:12] akila sridharan: சிந்து
[
[9/16, 22:21] sankara subramaiam: சிந்து



****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 17-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
இணையற்ற சந்திரனில் படர்ந்த கரி (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 17-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_இணையற்ற சந்திரனில் படர்ந்த கரி (4)_

_சந்திரனில்_ = *நிலா*

_சந்திரனில் படர்ந்த கரி_
= *நி(கரி)லா*
= *நிகரிலா*

= _இணையற்ற_
*************************
*ஒன்பதாம் திருமுறை* 

001-திருமாளிகைத் தேவர் - கோயில் - *ஒளிவளர் விளக்கே*  ************************                                       திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
    திகைக்கின்றேன் றனைத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
    நிகழ்வித்த *நிகரிலா* மணியே
அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய்
    ஆலின்கீழ் இருந்தஅம் பலவா
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
    தொண்டனேன் புணருமா புணரே

*பொழிப்புரை:*

மாறி வருகின்ற பிறவிகளில் அகப்படும் சில தெய்வங்களைப் பரம்பொருளாகக் கருதி அவற்றை அடைவதற்குரிய வழிகளிலே உள்ளம் மயங்கும் அடியேனை, மயங்காதவாறு நல்ல நிறத்தை உடைய பொன் போலவும் மின்னல் போலவும் ஒளி நிறைந்த உன் திருவடிகளின் கீழே ஈடுபடச்செய்த *ஒப்பில்லாத* மணி போல்பவனே! அறத்தின் பல கூறுபாடுகளையும் ஆராய்ந்த சனகர் முதலிய மேம்பட்ட தவத்தோர்கள் தலைவனாய் ஆலமரத்தின்கீழ்க் குருமூர்த்தியாய் அமர்ந்த பொன்னம்பலவனே! வைதிக சமயத்துக்குப் புறம்பான சமணர், புத்தர் என்பவர்களுடைய மயக்க நெறிகளையும் உண்டாக்கிய உன்னை அடியனேன் அடையுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[
[9/17, 07:01] A Balasubramanian: நிகரிலா
A.Balasubramanian
[I
[9/17, 07:01] திரைக்கதம்பம் Ramarao: நிகரிலா

[9/17, 07:06] மீ.கண்ணண்.: நிகரிலா

[9/17, 07:07] stat senthil: நிகரிலா

[9/17, 07:08] ஆர். நாராயணன்.: நிகரிலா

[9/17, 07:08] Meenakshi: விடை:நிகரிலா

[9/17, 07:09] Bhanu Sridhar: நிகரிலா
[
[9/17, 07:11] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏நிகரிலா🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/17, 07:12] ஆர்.பத்மா: நிகரிலா

[9/17, 07:16] பாலூ மீ.: நிகரிலா
[
[9/17, 07:24] Rohini Ramachandran: நிகரிலா

[9/17, 07:31] Dhayanandan: *நிகரிலா*

[9/17, 07:35] nagarajan: *நிகரிலா*

[9/17, 07:46] Ramki Krishnan: நிகரிலா

[9/17, 07:56] akila sridharan: நிகரிலா
[
[9/17, 08:13] sridharan: நிகரிலா
[
[9/17, 08:51] மாலதி: நிகரிலா
[
[9/17, 08:56] கு.கனகசபாபதி, மும்பை: நிகரிலா

[9/17, 09:06] prasath venugopal: நிகரிலா

[9/17, 10:17] sankara subramaiam: நிகரிலா
[
[9/17, 10:21] joseph amirtharaj: நிகரிலா
[
[9/17, 12:19] shanthi narayanan: நிகரிலா
[
[9/17, 12:39] siddhan subramanian: நிகரிலா
[
[9/17, 14:58] Venkat:
நிகரிலா 🙏🏾

[9/17, 16:24] வானதி: *நிகரிலா*
[
[9/17, 19:06] bala: நிகரிலா
[
[9/17, 19:18] Bharathi: *நிகரிலா*
[
[9/17, 19:19] sathish: நிகரிலா
[
[9/17, 21:09] Revathi Natraj: நிகரிலா
[
[9/17, 21:35] V N Krishnan.: நிகரிலா
[
[9/17, 21:49] chithanandam: நிகரிலா
***************************
Raghavan MK said…
இன்றைய உதிரிவெடி!*( 18-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

நிலை குலைந்து தெருவுள்ளே நரி வால் நுழைந்தது (4)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 18-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
பழமொழிகளின் உண்மையான வடிவமும், பொருளும் அறிந்து கொள்வதே நல்லது அல்லவா? அப்படித் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சில தமிழ்ப் பழமொழிகளில் ஒன்றைப் பார்ப்போம்.

*தவறு* :
_மண் *குதிரையை* நம்பி ஆற்றில் இறங்காதே!_*

*சரி* :
_மண் *குதிரை* நம்பி ஆற்றில் இறங்காதே!_

*மண் குதிர்* என்பது *மண் குவியல்* . ஆற்றின் நடுவில் தெரியும் மண் குதிர் நம்மை திடமாகத் தாங்கும் என்று எண்ணி அதை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது. அதில் கால் வைத்தால் அந்த மண் குதிர் *சரிந்து* நாம் விழ நேரிடும்.
***********************
_நிலை குலைந்து தெருவுள்ளே நரி வால் நுழைந்தது (4)_

_தெரு_ = *சந்து*

_நரி வால்_ = *ரி*

_தெருவுள்ளே நரி வால் நுழைந்தது_
= *ச(ரி)ந்து*
= *சரிந்து*

= _நிலை குலைந்து_
*************************
*திருப்புகழ் 735* *தாரகாசுரன்* *சரிந்து*  (தேவனூர்)
*********************
*பாடல்*

தாரகாசுரன் *சரிந்து* வீழ வேரு டன்ப றிந்து
     சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச் 

சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
     தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை 

ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
     மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும் 

ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
     ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ 

*பொருள்*

தாரகாசுரன் *நிலை பெயர்ந்து* வீழ்ந்து இறக்க, வேருடன் பறிபட்டு மேலான மேருமலையும் நடுக்கம் கொள்ள, முற்றிய மீன்களைக் கொண்ட அழகும் ஓசையும் உடைய சமுத்திரம் கலக்கமுற்று பெரும் தீயில் பட, அன்று கூரிய வேலினைச் செலுத்திய கடம்பனே என்றும், மதநீர் ஒழுகும் வாயையும், ஆரவாரத்தை உடையதும், தேவலோகத்தில் உள்ள பெருந்தலை கொண்டதுமான மலைபோன்ற ஐராவதம் என்ற யானை மீது அமர்ந்த தேவயானை என்னும் மானைப் போன்றவளும், வள்ளிமலை என்ற குன்றத்தில் இருந்த மான் போன்ற வேடப்பெண் வள்ளியும், இருவரும் ஆசை கொள்ளும் நண்பனே என்றும், சிறந்த மயில்வாகனனே என்றும், என் ஆசை தீர என்று மனம் ஒருநிலையில் நின்று புகழ்வேனோ?
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/18, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சரிந்து

[9/18, 07:00] stat senthil: *சரிந்து*

[9/18, 07:01] A Balasubramanian: சரிந்து
A.Balasubramanian

[9/18, 07:01] வானதி: *சரிந்து*

[9/18, 07:02] Venkat: சரிந்து 🙏🏾

[9/18, 07:03] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏சரிந்து🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/18, 07:04] மீ.கண்ணண்.: சரிந்து

[9/18, 07:08] ஆர். நாராயணன்.: சரிந்து

[9/18, 07:09] ஆர்.பத்மா: சரிந்து

[9/18, 07:11] பாலூ மீ.: சரிந்து


[9/18, 07:11] joseph amirtharaj: சரிந்து
[
[9/18, 07:14] Meenakshi: விடை:சரிந்து

[9/18, 07:15] sridharan: சரிந்து

[9/18, 07:43] கு.கனகசபாபதி, மும்பை: சரிந்து

[9/18, 07:51] Ramki Krishnan: சரிந்து

[9/18, 07:56] nagarajan: *சரிந்து*

[9/18, 08:02] akila sridharan: சரிந்து

[9/18, 08:04] மாலதி: சரிந்து

[9/18, 08:07] Dhayanandan: * சரிந்து*
[
[9/18, 08:26] chithanandam: சரிந்து
[
[9/18, 08:55] Bharathi: சரிந்து

[9/18, 09:22] prasath venugopal: சரிந்து
[
[9/18, 09:27] V N Krishnan.: சரிந்து
[
[9/18, 10:39] Rohini Ramachandran: சரிந்து
[
[9/18, 10:46] Bhanu Sridhar: சரிந்து
[
[9/18, 12:12] shanthi narayanan: சரிந்து
[
[9/18, 14:15] G Venkataraman: சரிந்து

[9/18, 18:02] siddhan subramanian: *சரிந்து* (சந்து+ரி)
[
[9/18, 20:32] N T Nathan: சரிந்து

[9/18, 20:32] Revathi Natraj: சரிந்து


****************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்