தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
*************************
*உதிரிவெடி 4198*
*************************
*"இடை யிடை இடை"* ... என்று மூன்று இடைகளில் விளையாடி புதிரமைத்துள்ள
ஆசிரியருக்கு பாராட்டுகள்! 💐
*************************
*இடைவேளை*
எத்தனையோ கவிஞர்கள் இடையைப் பற்றி இடையறாது பாடிவிட்டு போய்விட்டார்கள். இவர்களுக்கிடையே ஒரு இடைத்தேர்தல் வைத்தால் அதில் வெற்றி வாகைச் சூடுவது கண்ணதாசன்தான்.
சொல்லவரும் கருத்துக்களில் ஒரு நளினமிருக்கும்; ஆபாசம் இருக்காது.
கவிஞன் *‘மெல்லிடை’* என்றான். *‘கொடியிடை’* என்று சொல்லிப் பார்த்தான். திருப்தி இல்லை. இன்னும் சற்று மெலிய வைத்து *‘நூலிடை’* என்றான். ஊஹூம் அவன் எதிர்பார்த்த ‘எஃபெக்ட்’ கிடைக்கவில்லை. கடைசியில் *“இடையே இல்லை”* என்று சொல்லி விமோசனம் அடைந்துக் கொண்டான்.
*நடையா இது நடையா – ஒரு* *நாடகமன்றோ நடக்குது*
*இடையா? இது* *இடையா? – அது*
*இல்லாததுபோல் இருக்குது.*
என்ற கண்ணதாசனின் பாடல் கலக்கலான உதாரணம்.
*************************
_வயலில் வளையில் வாழும் இடையிடை இடை காண்க (3)_
_இடை காண்க_
= _mid letter in காண்க_
= *ண்*
_இடையிடை_
= _*நடு* இடை_
= _To place *ண்* inside *நடு*_
= *நண்டு*
= _வயலில் வளையில் வாழும்_
*************************
இடையுடன்-மின்னலை இணைத்து நிறைய பாடியிருக்கிறார்.
*“இல்லை என்று சொல்வதுந்தன்*
*இடையல்லவா* –
*மின்னல்*
*இடையல்லவா”*
******
*ஒடிவது போல் இடை இருக்கும்”* என்ற கேள்வி பிறக்க *இருக்கட்டுமே* ”என்ற பதிலும் தொடர்ந்து வரும். நாயகி நடந்து போனாலே கவிஞருக்கு வெலவெலக்கத் தொடங்கி விடும்.
*மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!*
*முல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்*
*சின்ன இடை வளைந்தாடும்*
*வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்!”*
என்ற தன் பயத்தை வெளிக்காட்டி விடுவார்
******
கண்ணதாசனின் மற்றொரு ‘மாஸ்டர் பீஸ்’ *அன்புள்ள மன்னவனே!* என்று தொடங்கும் காதற் கடித பாடல்.
*இளையகன்னியின் இடை மெலிந்ததோ*
*எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?”*
என்ற சந்தேகத்தை நாயகன் கிளப்ப
*இடை மெலிந்தது இயற்கை அல்லவா*
*நடை தளர்ந்தது நாணம் அல்லவா”*
என்ற நெத்தியடி பதில் நாயகியிடமிருந்து வரும். எவ்வளவு நாசுக்கான ‘ *இடை* ’ வருணனை?
*************************
*'எடைக்கு எடை’* நாணயம் கொடுப்பதுபோல் இதற்காகவே இவருக்கு *‘இடைக்கு இடை’* ஏதாவது சன்மானம் கொடுத்திருக்கலாம்.
*************************
💐🙏🏼💐