Skip to main content

விடை 4160

இன்று காலை வெளியான வெடி:
இடை செருக செருக அலற ஒரு ஸ்வரத்துடன் உண்டாகு (5)
அதற்கான விடை: கருத்தரி கத்த + ரு + ரி
கத்த = அலற
ரு = இடை செருக
ரி = ஒரு ஸ்வரம்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*உதிரிவெடி 4160* (அக்டோபர் 31, 2021) வாஞ்சிநாதன் *************************
_சிவவாக்கியரின் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு, தலயாத்திரை, மத வாதம், வேதம் ஓதல், சாதியாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன்! உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.)_
*************************
*சிவவாக்கியம்-169*

_*கருத்தரிக்கும்* முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்_
_உருத்தரிக்கும் முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்_
_அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்_
_திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்!!!_

தாயின் வயிற்றில் கருவாக தரிப்பதற்கு முன்பு உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக்கி வளர்வதற்கு முன்பு உயிர் இருந்த இடம் எது. இறை அருள் கிடைப்பதற்கு முன்பு ஆசைகளின் மனம் நின்றது எவ்விடம் என்பதை, யாவும் சந்தேகங்கள் ஏதுமின்றி திருக்கமுடன் தெரிந்து கொண்டு ' *சிவாயநம* ' என்ற அஞ்செழுத்தாக இருப்பதை அறிந்து கொண்டு பஞ்சாட்சரத்தை சொல்லி தியானியுங்கள்.
🙏🏼
*************************
_இடை செருக செருக அலற ஒரு ஸ்வரத்துடன் உண்டாகு (5)_

இடை செருக = [செ]ரு[க] = ரு
அலற = கத்த
ஒரு ஸ்வரம் = ரி
செருக = insertion indicator to place ரு ibside கத்த
உண்டாகு = க(ரு)த்த+ரி
= *கருத்தரி*
***********************
*சிவவாக்கியம்-170*
 
_*கருத்தரிக்கு* முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்_
_உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்_
_அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்_
_திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்._

ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு ' *சிவாயநம* ' என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.
************************
★ Blast from the past ★
************************
*உதிரிவெடி 3817*
[October 08, 2019]

_வெட்டு இரு பாதி கொண்டு உண்டாகு (5)_

விடை: கருத்தரி

வெட்டு= கத்தரி
இரு பாதி = 1/2 இரு = ரு
உண்டாகு = கத்தரி+ரு
= *கருத்தரி*
*************************
💐🙏🏼💐

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்