இன்று காலை வெளியான வெடி திருமகளே பரம்பரையில் வாய்த்திருப்பதால் ஏற்பாடுகளில் ஒரு பரபரப்பு (5) இதற்கான விடை: களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.
Comments
*************************
*உதிரிவெடி 4160* (அக்டோபர் 31, 2021) வாஞ்சிநாதன் *************************
_சிவவாக்கியரின் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு, தலயாத்திரை, மத வாதம், வேதம் ஓதல், சாதியாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன்! உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.)_
*************************
*சிவவாக்கியம்-169*
_*கருத்தரிக்கும்* முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்_
_உருத்தரிக்கும் முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்_
_அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்_
_திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்!!!_
தாயின் வயிற்றில் கருவாக தரிப்பதற்கு முன்பு உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக்கி வளர்வதற்கு முன்பு உயிர் இருந்த இடம் எது. இறை அருள் கிடைப்பதற்கு முன்பு ஆசைகளின் மனம் நின்றது எவ்விடம் என்பதை, யாவும் சந்தேகங்கள் ஏதுமின்றி திருக்கமுடன் தெரிந்து கொண்டு ' *சிவாயநம* ' என்ற அஞ்செழுத்தாக இருப்பதை அறிந்து கொண்டு பஞ்சாட்சரத்தை சொல்லி தியானியுங்கள்.
🙏🏼
*************************
_இடை செருக செருக அலற ஒரு ஸ்வரத்துடன் உண்டாகு (5)_
இடை செருக = [செ]ரு[க] = ரு
அலற = கத்த
ஒரு ஸ்வரம் = ரி
செருக = insertion indicator to place ரு ibside கத்த
உண்டாகு = க(ரு)த்த+ரி
= *கருத்தரி*
***********************
*சிவவாக்கியம்-170*
_*கருத்தரிக்கு* முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்_
_உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்_
_அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்_
_திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்._
ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு ' *சிவாயநம* ' என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.
************************
★ Blast from the past ★
************************
*உதிரிவெடி 3817*
[October 08, 2019]
_வெட்டு இரு பாதி கொண்டு உண்டாகு (5)_
விடை: கருத்தரி
வெட்டு= கத்தரி
இரு பாதி = 1/2 இரு = ரு
உண்டாகு = கத்தரி+ரு
= *கருத்தரி*
*************************
💐🙏🏼💐