Skip to main content

விடை 4184

இன்று காலை வெளியான வெடி:
பாடலில் இனிமை முழுமையாக வராமல் கடைசி அடி தரும் கலவையான சத்தம் (4) அதற்கான விடை: சந்தடி = சந்தம் - ம் + (அ) டி
சந்தம் = பாட்டிற்கு ஓசை நயத்தால் இனிமை தருவது

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
_உதிரிவெடி 4184 by வாஞ்சிநாதன்_ 
*************************
சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

சிந்தை இருக்குது
*சந்தம்* இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

(படம் : வறுமையின் நிறம் சிகப்பு :1980)
*************************
*சந்தம்* என்ற சொல்லுக்கு *_அழகு_ , _ஒலியின் வண்ணம்_* என்று பொருள் குறிப்பிடப்படுகிறது. சந்திக்கும் தன்மை சந்தமாகும். ஓசை அலை போல் மீண்டும் சந்திப்பதால் இதற்குச் *சந்தம்* என்ற பொருள் வந்தது என்று, _தமிழிசைக் கலைக் களஞ்சியம்_ குறிப்பிடுகின்றது. இதனைத் _தொல்காப்பியர்_ *வண்ணம்* என்கிறார் . *சந்தம்* என்ற சொல்  *வண்ணத்தைக்*  குறிக்கும்.
*************************
வைணவ இலக்கியமான *நாலாயிர திவ்விய பிரபந்தத்தில்* பன்னிருஆழ்வார்களுள் ஒருவரான *திருமழிசையாழ்வார்* பாடிய பாடல் *திருச்சந்த விருத்தம்* என்று அழைக்கப்படுகின்றது. இவை *சந்தமிக்க இனிய ஓசை* யுடையன. தாளக் கட்டமைப்புச் செறிவுடையன.
*************************
_பாடலில் இனிமை முழுமையாக வராமல் கடைசி அடி தரும் கலவையான சத்தம் (4)_

_பாடலில் இனிமை_
= *சந்தம்*

_முழுமையாக வராமல்_
= *சந்த(ம்) = சந்த*

_கடைசி அடி_
= *(அ)டி = டி*

_தரும்_ = *சந்த+டி*
= *சந்தடி*

= _கலவையான சத்தம்_
*************************
*பழமொழிகள்*

_திருமணச் சந்தடியில் தாலிகட்ட மறந்தது போல_ 

_குந்தினாயே குரங்கே, உன் சந்தடி அடங்கே._

_சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்._

*(சந்தடியோ சந்தடி 😂😂😂)*

_*சந்தம்* இல்லாக் கவிக்கு *அந்தம்* இல்லை._

(அந்தம்-அழகு.)
*************************
*காதல் பிரசவம்*

நான் பிரசவ தாய்
நீதான் அன்பே
என்னுள் கவிதைகளை பிரசவித்தாய்....

*சந்தடி* சாக்கில்
என்னுள் புகுந்து
*சந்த அடி* போட வைத்தாய்...

(நாகூர் கவி)
*************************
_நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள_
_வருத்தபடாத வாலிபர் சங்கம்_

_கண்ட இடத்துல வெத்தல போடுவோம்_
_காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்_
_சண்டை நடக்கையில் கட்டைய போடுவோம்_
_*சந்தடி* சாக்குல ஆட்டைய போடுவோம்_

_நாங்க_
_அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்_
_அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம்_

_இதுக்கு மேல என்னத்த சொல்ல_
_வருத்தப்படாத வாலிபர் சங்கம்_
_இவிங்க வருத்தபடாத வாலிபர் சங்கம்_

(திரைப்படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்:2013)
*************************
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...